
உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள அழிவு குறித்து நாளை கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் முறைப்பாடளிப்பதோடு நீதிமன்ற ஊடக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார். சிறிகொத்தாவில் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே... Read more »

நாட்டில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 93 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த தொற்றாளர்கள் அனைவரும், ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்... Read more »

யாழ். வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரி இன்று முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் விடுத்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக... Read more »

வவுனியா குருமண்காட்டுப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை முச்சக்கரவண்டியொன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு குறித்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய முச்சக்கர வண்டியின் சாரதி மதுபோதையில் இருந்தார் என... Read more »

மன்னார் மறை மாவட்ட ஓய்வுநிலை ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு யோசேப்பு ஆண்டகைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இராயப்பு யோசேப்பு ஆண்டகை தமிழ்த் தேசியத்துக்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக பொத்துவில் தொடக்கம்... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காக படகில் பயணித்த இளைஞர் கடலில் தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் செம்பியன்பற்று வடக்கைச் சேர்ந்த கெனடி பிறின்ஸ்ரன் என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நண்பர்களுடன் படகில் பயணித்துக் கொண்டிருந்தபோது... Read more »

கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த, யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள கொரோனாத் தடுப்புச் சிகிச்சை நிலையத்தில், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொற்றுக் குணமடைந்த நிலையில் சிகிச்சை மையத்திலிருந்து நேற்று... Read more »

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபை முறைமையை ஒரு தரப்பினரது குறுகிய நோக்கிற்காக இரத்து செய்ய முடியாது என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மினுவாங்கொட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு... Read more »

கிளிநொச்சி பெரிய பரந்தன் வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அன்னதான மண்டபம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் திறந்து வைக்கப்பட்டது. ஆலயத்தின் பரிபாலன சபையின் தலைவர் சு.யதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து... Read more »