
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை துப்பரவு செய்து எல்லையிட்டு விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கோடு வேலைகளில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவரை பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்தி அவரின் வேலைகளுக்கு தடைவிதித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.... Read more »

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள போதிலும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்படும் வரை அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் காணப்படும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்... Read more »

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவின் பாரதி வீதியில் சென்றவரினால் சிறுமி ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க மாலை அறுத்துச்செல்லப்பட்ட சம்வம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் உதவியினை நாடியுள்ளனர். பாரதி வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஓருவரின் தங்கமாலையை துவிச்சக்கர... Read more »

விடுதலைப் புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களையும் ஐ.நா.வும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற அமைப்புக்கள் பதிவு செய்திருந்தன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்களில் ஒருவரான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற அவ்வாறான சம்பவங்கள் குறித்த... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். பெரிய போரதீவு காளி கோவிலுக்கு முன்பாக களுவாஞ்சிகுடியில் இருந்து வந்த முச்சக்கர வண்டியும் 39ஆம் கிராமத்தில் இருந்து வந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில்... Read more »

அரச வெசாக் நிகழ்வுகளை யாழ்ப்பாணம் நயினாதீவு ரஜமகா விகாரையில் நடாத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார். அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைச் சுட்டிக்காட்டியதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள 65 விகாரைகள் மற்றும்... Read more »

தொழில்வாய்ப்புகளுக்காக ஓமனுக்குச் சென்று, அங்கு பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்ட 315 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஓமன் மஸ்கட்டிலிருந்து இரு விமானங்கள் மூலமாக அவர்கள் நேற்றுமாலை நாட்டை வந்தடைந்தனர். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை திருப்பியனுப்பும் திட்டத்தின் கீழ் இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 188 இலங்கையர்களுடன்... Read more »

யாழ்ப்பாணம் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவத்திற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் நேற்றைய தினம், கச்சதீவுக்குச் சென்று ஆராயப்பட்டுள்ளது.கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய வருடாந்த உற்சவத்தில் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்வர். கொவிட் 19 தொற்றுக் காரணமாக இவ்வருடம் பக்தர்களுக்கான... Read more »

நுவரெலியா பொகவந்தலாவ சீனாகலை பூசாரி தோட்டத்தில் நேற்று மாலை 400 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. பொகவந்தலாவ சீனாகலைப் பகுதியில், 16 கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதுடன், ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. இதனையடுத்து அப் பகுதி கடந்த 23ஆம் திகதி முதல் முடக்கப்பட்டுள்ளது. சீனாகலை... Read more »

யாழ்ப்பாணத்தில், போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு, மாற்றம் அறக்கட்டளை நிறுவனத்தினால் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ‘போதித்தது போதும், சாதித்திட விரையுங்கள்’ என்;னும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு பத்து நாட்கள் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. பயிற்சியின் இறுதிநாள் நிகழ்வு, அருட்சந்தை... Read more »