
கொரோனா தாக்கத்தின் பின்னர், தொழில் பாதிப்புக்களை இழந்த வாடிக்கையாளர்களுக்கு, ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்கும் நிகழ்வு, ஹட்டன் நசனல் வங்கியின், யாழ்ப்பாணம் பருத்தித்துறை கிளையில், இன்று காலை நடைபெற்றது. பருத்தித்துறை வங்கி முகாமையாளர் யோ.பாலகுமார் தலைமையில இடம்பெற்ற நிகழ்வில், வட பிராந்திய விற்பனை... Read more »

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் இடித்து அழிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில், இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில், நினைவிடம் ஒன்று, மாணவர்களால் அமைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன்... Read more »

யாழ்ப்பாணம் மருதனார்மடம் கொரோனா கொத்தணியில், மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில், இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 5 பேருக்கு, தொற்று உள்ளதாக அறிக்கை... Read more »

நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 47 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது. இன்று, மேலும் 524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனால், திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில், தொற்றாளர்களின் எண்ணிக்கை,... Read more »

அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை, ஈராக் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு, ஈரானின் புரட்சிப் படைத்தளபதி காசிம் சோலெய்மனியை, ஆள் இல்லா விமானம் மூலம், அமெரிக்க இராணுவம் ரொக்கெட் தாக்குதல் நடத்தி கொலை செய்தமை தொடர்பான வழக்கில்,... Read more »

மட்டக்களப்பு உதயம் விழிப்புணர்வு மன்ற உறுப்பினர்களின் வாழ்வாதார உதவிக்கான காசோலை கையளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு கரடியனாறு மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றது. மட்டக்களப்பு சமூக விழிப்புணர்வு மன்றத்தின் தலைவர் பொன் மனோகரன் தலைமையில் கரடியனாறு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் உதயம் விழிப்புணர்வு மன்ற... Read more »

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது கல்வி அமைச்சர் இவ்வாறு கூறினார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். Read more »

கொவிட்-19 தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர். இந்தியாவிலிருந்து 29 பேர், கட்டாரிலிருந்து 30 பேர், ஜப்பானிலிருந்து 45 பேர், அவுஸ்திரேலியாவிலிருந்து 157 பேர் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக கொவிட்-19... Read more »

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனாத் தொற்று உறுதியானதையடுத்து அவர், ஹிக்கடுவயிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more »

நாட்டில் முகக்கவசம் அணியாத மேலும் மூவர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாத நபர்களை அடையாளம்காண மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது 377 பேர் நேற்றைய தினம் கைது... Read more »