இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நிபந்தணையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத்துறையின் மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு 5 வருடங்கள் ஒத்திவைத்த இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதிவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டார்.
கடந்த முதலாம் திகதி விசைப்படகு ஒன்றுடன் நுழைந்து நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் நேற்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்றினால் நிபந்தணையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.(நி)