ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று நடைபெற்றது.
இச் சந்திப்பு, யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இலங்கையில் எதிர்காலத்தில் தேர்தல் ஒன்று இடம்பெறுமானால், அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்களை, இலங்கை அரசாங்கம் அழைத்தால், அவர்கள் இந்த கண்காணிப்புக்கு வருகை தருவதற்கு அவசியமான காரணங்கள் குறித்து ஆராயும் முகமாக, இந்த நிபுணர்கள் குழு, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். (சி)