ஆண்டுதோறும் ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமைகளில் இந்துக்களின் முக்கிய விரதத்தில் ஒன்றான வரலட்சுமி விரத பூஜை நடைபெறும். அந்தவகையில் இன்றையதினம் வரலக்சுமி காப்பு கட்டும் நிகழ்வு இடம்பெறுகின்றது.
நெடுங்கேணி இலுப்பை நாகதம்பிரான் ஆலயத்தில் இன்று காலை, ஆலய பிரதம குருக்களினால் பூஜைகள் நடாத்தப்பட்டு வரலக்சுமி காப்புகட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் பெருமளவான பெண்கள் தங்கள் வாழ்வில் மாங்கல்யம் நிலைத்திருக்க வேண்டி விரதம் இருந்து காப்புகட்டும் வைபவத்தில் கலந்துகொண்டனர். (சி)