கண்டி – கொழும்பு பிரதான வீதியில், இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில், இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கண்டி – கொழும்பு பிரதான வீதியின், நிட்டம்புவ பகுதியில் விபத்து சம்பவித்துள்ளது.
தனியார் பேரூந்து, கப் ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிரே வந்த வானுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இந்த நிலையில், நிட்டம்புவ பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இன்று இரவு, வவுனியா, ஓமந்தை, சேமமடுப் பகுதியில், வீதியின் குறுக்கே பன்றி பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில், இருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (சி)