தாதியர் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட 1,603 பேருக்கு நாளை நியமனம் வழங்கப்படவுள்ளது.
தாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 1,603 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் நாளை அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.
இதன்கீழ், 686 மூன்றாம் நிலை தாதிய அதிகாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை ஆரம்ப தாதி கல்லூரிகளின் கீழ் வாட் முகாமைத்துவம், மற்றும் கண்காணிப்புத் தொடர்பில் 800 பேருக்கும், பொதுச் சுகாதார தாதிகளாக 115 பேருக்கும் இதன்போது நியமனம் வழங்கப்படவுள்ளது.(நி)