கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜனது தந்தையாருக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது.
இதற்கமைய விசாரணைக்காக நாளை ஆறாம் திகதி கொழும்பு-1 இல் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் அலுவலகத்திற்கு வருமாறு, அவருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பாணையில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பாக தங்களிடம் வாக்குமூலம் பெற வேண்டி இருப்பதால் ஆறாம் திகதி ஒன்பது மணியளவில் இரண்டாம் மாடி, புதிய செயலகக் கட்டிடம், கொழும்பு ஒன்று எனும் விலாசத்தில் அமைந்துள்ள விசாரணைப்பிரிவில் அதிகாரியை சந்திக்குமாறு கோரப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜனது தந்தைக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (சி)