இன்று நாட்டில் பலருக்கும் தெரியும் சில அரசியல் தலைவர்கள் களுத்துறை மகாசங்கரத்தின தேரருக்கு எதிராக வஞ்சனையான பேச்சுக்ளை பேச ஆரம்பித்து விட்டார்கள். அது மட்டுமல்ல அந்த மதத்தினை பின்பற்றிக்கொண்டு இவ்வாறு செய்வது சமாதானத்தினையும், ஒற்றுமையையும் மதங்களுக்குள் இல்லாமல் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையா நாம் பார்க்கின்றோம்.
இவ்வாறானவர்களுக்கான உதவிகளை, ஆதரவுகளை கட்சியின் தலைவர்கள் நிறுத்திக் கொள்வதுடன். இதுபோன்று செயற்படுபவர்களுக்கு தண்டணை கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான யுகம் தற்போது எழுந்துள்ளது. இன்று இவ்வாறான நிலமை ஏற்பட்டுள்ளமைக்கு யார் பொறுப்பானவர்கள் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். இதுபோன்று செயற்படுவதை நிறுத்துவது எமது பொறுப்பு என்று நாம் நினைக்கின்றோம். (மு)