சிறந்த எதிர்கால தலைமுறையை கட்டியெழுப்புவதற்கு சமயக் கல்வி அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டில் சிறந்த எதிர்கால தலைமுறையை கட்டியெழுப்புவதற்கு பாடசாலை கல்வியுடன் சமயக் கல்வியும் வழங்கப்படவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கதுறுவெல ஜயந்தி விகாரையில் நேற்று இடம்பெற்ற 124ஆவது அகில இலங்கை அறநெறி பாடசாலைகள் தின தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒழுக்கப் பண்பாடான சமூகமொன்றை கட்டியெழுப்புவுதற்கு அறநெறிக் கல்வி மிகவும் அவசியம் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அறநெறிக்கல்வியை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று கூறினார்.
இதன்போது 40 வருட சேவையை பூர்த்தி செய்த அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் சமாதான நீதவான் பதவியும் வழங்கப்பட்டது.
அத்தோடு ஆசிரியர் கொடுப்பனவுகள் மற்றும் சீறுடைகள் வழங்கும் நிகழ்வையும் ஜனாதிபதி நேற்றைய தினம் ஆரம்பித்து வைத்தார். (நி)