இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, இன்று காலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலய கழக அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில், தி.மு.க சட்டத்தரணி இராதாகிருஷ்ணனும் கலந்துகொண்டார்.
கடந்த தேர்தலில் தி.மு.க பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இலங்கை அரசியல் நிலைமைகள் குறித்தும் விளக்கியுள்ளார். (சி)