மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளார்.
தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோனும் விரைவில் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளாரென சொல்லப்படுகிறது.
மத்திய மாகாண ஆளுநரும், தென்மாகாண ஆளுநரும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் செய்த முறைப்பாடுகளையடுத்து, அவர்களை பதவி விலக ஜனாதிபதி கோரியிருந்தார் என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், மத்திய மாகாண ஆளுநர், தனது பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.(மு)