கடந்த வரவு – செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கான இரண்டாயிரத்து 500 ரூபா கொடுப்பனவு இன்று முதல் மாதாந்த சம்பளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த சம்பள அதிகரிப்புக்கென அரசாங்கம் இரண்டாயிரத்து 700 மில்லியனுக்கும் அதிகமான நிதியை செலவிட்டிருக்கிறது.
2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 107 சதவீதத்தால் அதிகரிக்கும்.
ஜூலை மாதம் முதல் அமுலாகும், அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கும், ஓய்வூதிய கொடுப்பனவுக்கும் ஆயிரம் பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(சே)