முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய, தேர்த்திருவிழா நேற்று சிறப்பாக இடம்பெற்றது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் தான்தோன்றிஸ்வர் ஆலயத்தின் தேர்த்திருவிழா நேற்றைய தினம் இடம்பெற்றது.
விசேட வசந்த மண்டப பூஜைகளையடுத்து, தான்தோன்றீஸ்வர பெருமான் வீதி வலம் வந்து, தேரில் ஆரோகணித்து அடியவர்களுக்கு அருள்புரிந்தார்.
இன்றைய தினம் தான்தோன்றீஸ்வர பெருமானின் தீர்த்தோற்சவம் இடம்பெறுகின்றது. (நி)