கொழும்பு துறைமுக நகரில் சேவையாற்றும் சீன பிரஜைகள் 1,000 பேருக்கும் சினோபார்ம் கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் நேற்றுடன் கொழும்பு நகரில் உள்ள அனைத்து சீன பிரஜைகளுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரண்டாவது நாளாகவும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் 1,083 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகவும் கொழும்பு மாநகர சபையின் நோய் தடுப்பு வைத்திய அதிகாரி தினூகா குருகே தெரிவித்துள்ளார்.
சினோபாம் தடுப்பூசி பெற்றுக் கொண்ட யாருக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.