இலங்கை அரசாங்கம், பொறுப்புக்கூறுதல் நீதி மற்றும் மனித உரிமை விவகாரங்களில், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவத் தயார் என, பிரிட்டனின் அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில், இலங்கையுடன் ஆக்கபூர்வமான விதத்தில் இணைந்து செயற்படுவதற்கு, பிரிட்டன் தயாராகவுள்ளது.
முடிவடைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில், இலங்கை உட்பட பல நாடுகள், குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளதை வரவேற்கின்றோம்.
இந்த தீர்மானம், யுத்தத்திற்கு பிந்திய பொறுப்புக்கூறல் நீதிக்கான, சர்வதேச சமூகத்தின் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் ஆழ்ந்த கவலையை வெளியிடும் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதத்தில், இந்த தீர்மானம் காணப்படுகின்றது.
இலங்கையில், மீண்டும் கடந்த காலத்தின் மோசமான மீறல்கள் இடம்பெறலாம்.
இதன் காரணமாக, ஐ.நா, இலங்கையின் மனித உரிமை நிலவரத்தை தொடர்ந்து கண்காணிப்பதும், எதிர்கால பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளுக்காக ஆதாரங்களை சேகரிப்பதும் சரியான விடயம்.
என பிரிட்டனின் அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு குறிப்பிட்டுள்ளார்.