அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான புதிய நிர்வாகம், மனித உரிமை விவகாரங்களில், தொடர்ந்தும் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் என, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்ளிட்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்ளிட்ஸ நேற்று கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
அமெரிக்கா, மீண்டும் மனித உரிமை பேரவையில் இணைந்து கொள்ளுமா என்பது குறித்து, தற்போதைக்கு தெரிவிக்க முடியாது.
அமெரிக்கா, ஏனைய நாடுகள் மூலமாக, இலங்கையில் உண்மையான அமைதி காணப்படுவதை உறுதி செய்வதற்காக பாடுபடும்.
முன்னைய அரசாங்கத்தின் போதும், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியிலும், மனித உரிமை விடயங்களிலான முன்னேற்றம், மிகவும் மந்தகதியிலேயே காணப்படுகின்றது.
மனித உரிமைக்கு ஆதரவளிப்பதை, இலங்கையுடன் வலிந்து மோதலில் ஈடுபடுவதாக கருதக்கூடாது.
என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்ளிட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.