இலங்கையின் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் பிரிட்டன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் தனது ருவிட்டர் பதிவின்மூலம் இதனை வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களைக் கட்டாயமாக எரிக்கும் நடைமுறை உட்பட இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் பிரிட்டன் அவதானமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான ஐ.நா அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது.
இதன்போது, பிரிட்டனின் அணுகுமுறைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேநேரம், பிரிட்டனின் பொதுநலவாய, அபிவிருத்தி விவகார அமைச்சர் தாரிக் அஹ்மட் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து கூறுகையில்,
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரை முன்னிட்டு, கொரோனாத் தொற்றால் உயிரிழந்த மதக் குழுக்களின் உடல்களைக் கட்டாய எரிப்புக்கு உட்படுத்துவதன் தாக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.