அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸ்க்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடனும், உப ஜனாதிபதியாக கமலா ஹாரிஸும் நேற்று பதவியேற்றனர்.
இந்த நிலையில், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தானும் தனது அரசாங்கமும் ஒரு வலுவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு உறவை நோக்கி ஒன்றிணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,
தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையில் உள்ள இராஜாந்திர உறவானது மேலும் வலுப்பெறும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் தனது ருவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸை வாழ்த்தி தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.