தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள், மூன்று நாட்களாகியும் கரைதிரும்பவில்லை என உறவினர்கள்கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை, பாம்பன் வடக்கு துறைமுகத்திலிருந்து புறப்பட்ட 60 நாட்டுப்படகுகள் இணைந்து மீன்பிடிக்கச் சென்றுள்ளன.
இந்நிலையில், ஏனைய மீனவ படகுகள் கரைதிரும்பிய நிலையில்,ஸ்டீபன், அந்தோனி, வின்சன்ட், சின்தாஸ் ஆகிய மீனவர்கள் பயணித்த படகு கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, சக மீனவர்கள் மீண்டும் கடலில் தேடுதல் நடாத்தியபோதும் காணாமல்னோவர்களை இனங்காணமுடியவில்லை.
இதனடிப்படையில், கரைதிரும்பாத மீனவர்களின் நிலைகுறித்து, இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.(சி)