தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான ஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவர், விசாரணைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இன்று, நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில், சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்றதாக கூறப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் மரணமடைந்தவர்களின் தகவல்களை உறுதிப்படுத்தி, மரணச் சான்றிதழ் வழங்குவதற்கென, மரண விசாரணைக்காகவே மேற்படி நபர்கள் அழைக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மரண விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களில், ஸஹ்ரானின் தங்கையான நியாஸ் மதனியா மற்றும் அவரது கணவர் எம்.எம்.நியாஸ், சாய்ந்தமருது தாக்குதலில் பலியான வார உரைகல் ஊடகவியலாளர் என கூறப்படும் நியாஸ் என்பவரின் மனைவி அஸ்மியா உள்ளிட்டோர், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் குற்றப்புலனாய்வு வாகனம் மற்றும் சிறைச்சாலை பேரூந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும், இவ்வாறு இன்று ஆஜர்படுத்தப்பட் ஷஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் தொடர்பான விசாரணைகள் யாவும், நீதிவானின் சமாதான அறையில் மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, வேறு வேறாக ஷஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் ஆஜர்படுத்தப்பட்டு, நீண்ட நேர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
மேற்குறித்த மரண விசாரணை தொடர்பாக, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி, விசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. (சி)