போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமான வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மாணவர்களின் ஊர்வலமும் வீதி நாடகமும், நுவரெலியா நானுஓயா பகுதியை சேர்ந்த தமிழ், சிங்கள மாணவர்களால், நானுஓயா நகரில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
நானுஓயா பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், போதைப்பொருட்களுக்கு எதிரான பாதாதைகளை ஏந்தி, நகரில் ஊர்வலமாக சென்றதுடன். நகரில் வீதி நாடகத்தையும் முன்னெடுத்தனர்.
போதைப்பொருட்களால் ஏற்படும் விளைவுகள், அல்லது பாதிப்புகள், அதனை தடை செய்வதற்கு மாணவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள், வீதி நாடகம் மூலமாக சமூகத்திற்கு தெளிவுபட்டப்பட்டது.
போதைப்பொருட்களை பயன்படுத்துவதனால், பெருந்தோட்ட மக்கள் எவ்வாறான சமூக, பொருளாதார, சுகாதார பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர் என்றும் மக்களுக்க தெளிவுப்படுத்தப்பட்டது. (சி)