திறந்த சதுரங்கப் போட்டி, வவுனியா வைரவப்புளியங்குளம் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில், இன்று நடத்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட சதுரங்க சம்மேளன செயலாளர் பிரபாகரன் ஜானுஜன் தலைமையில் இடம்பெற்ற போட்டியில், பிரதம விருந்தினராக, வெண்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலாளர் கெ.சிவகரன் கலந்துகொண்டார்.
இதன் போது, பாடசாலை மாணவர்கள், இளைஞர் யுவதிகள் என பலரும் இணைந்து கொண்டனர்.
நிகழ்வில், வவுனியா மாவட்ட உதவி செயலாளர் நா.கமலதாசன், வைரவப்புளியங்குளம் கிராம உத்தியோகத்தர் க.விஜயகுமார், ஐ.சி.சி கம்பஸ் இயக்குனர் எஸ்.சந்திரகுமார், வர்த்தகர் ஜீவகரன், மாவட்ட செயலக உத்தியோகத்தர் ஜெ.ஜெயசீலன் ஆகியோர் விருந்தினராக கலந்துகொண்டனர்.(சி)