கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தவேண்டும் என கோரி நடத்தப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த வேண்டுமென கோரியும் வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடுகள் இடம்பெற்றன.
வவுனியா இந்து ஆலயங்களின் ஒன்றியமும் சமூக அமைப்புக்களும்; ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம் இன்று காலை 7.30 மணிக்கு இடம்பெற்றது.
கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர் ஆலய முன்றலில் 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டது.
இதன்போது மடுகந்த மூவட்டகம ஆனந்த தேரோ, முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகதாரலிங்கம், ராஜா குகனேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.