மலையகத்தில் பெய்துவரும் கடும் மழையால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன், நாவலப்பிட்டி நகரம் நீரில் மூழ்கியுள்ளது.
இன்று அதிகாலை முதல் பெய்து வரும் கடும் மழையால் நாவலபிட்டி பேருந்து தரிப்பிடத்திலிருந்து நாவலபிட்டி பொலிஸ் நிலையம் வரையில், கண்டி ஹட்டன் பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளதால் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.