இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்தொழில் நீரியல் வள திணைக்கள யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெய ராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.
3 விசைப் படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடித்த போதே, இவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள், தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். (சி)