ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசகர் எனக் கூறிக்கொண்டு, மொரட்டுவையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபரை அச்சுறுத்திய நபர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலியான முறையில் அச்சுறுத்தல் விடுத்து, தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் அவரை கைது செய்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
11/9, புனித செபஸ்டியன் மாவத்தை, மொரட்டுவை எனும் முகவரியை சேர்ந்த ஸ்ரீயானந்த திஸ்ஸ டி அல்விஸ் என்ற நபர், இதன் போது கைது செய்யப்பட்டார்.
இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற இந்த நபர், மொரட்டுவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த நபர் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் சில்வா குறிப்பிட்டுள்ளார்.