இலங்கை இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கு அமைவாக இலங்கையில் கடற்கரை கரையோர பிரதேசங்களை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோரப் பிரதேசங்களில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட இராணுவத்தின் 54ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில், 54ஆவது படைப்பிரிவு அதிகாரி பிரிகேடியர் சுபசன வெளிகல தலைமையில் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் குறித்த தூய்மையாக்கும் நடவடிக்கைகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது, கடற்கரை பகுதியில் காணப்பட்ட அனைத்து விதமான கழிவுப் பொருட்களும் முறைப்படி அகற்றப்பட்டன.
இதன்போது மாவட்டத்தில் உள்ள இராணுவ அதிகாரிகள், இராணுவ வீரர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.