நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட வெதமுல்ல தோட்டம் கெமினதன் தோட்டத்தில் கடந்த 15 ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் தமது வீட்டையும், வீட்டுப் பொருட்களையும், அனைத்து ஆவணங்களையும் இழந்து நின்ற 02 பிள்ளைகளுடன் கூடிய இளம் குடும்பத்திற்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அயலவர்களின் உதவியுடன் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தாலும் வீட்டு பொருட்கள், பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல வாங்கிய அனைத்து உபகரணங்களும், சில ஆவணங்களும், உடைகளும், சாப்பாட்டு பொருட்களும் முற்றாக எரிந்து நாசமாகின.
இந்நிலையில் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆர்.ராஜாராம் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது பாதிக்கப்பட்ட குடும்பம் தங்களது வீட்டை மேலும் தற்காலிகமாக அமைத்துக்கொள்ள ஒரு தொகை தகரங்களும் கையளிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட இளம் குடும்பத்திற்கு தற்காலிகமாக உதவுவதற்கு பலர் முன்வந்த போதும் நிரந்தரமான வீடு ஒன்றை அமைத்துக் கொள்வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளம் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.