இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் 70 ஆம் ஆண்டு நிறைவு விழா, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், இன்று நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில், கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை அடுத்து, கட்சிக் கொடி ஏற்றப்பட்டு, மங்கள விளக்கேற்றப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
முதன்மை விருந்தினராக, தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கலந்துகொண்டார்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, மத தலைவைர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.