கடந்த 24 நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 10,025 பெயர் பதிவாகியிருப்பதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
2019 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி வரையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 95,178 பெயர்கள் பதிவாகியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 102 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் கடந்த 24 நாட்களுள் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 381 ஆகும்.அதேவேளை இந்த வருடத்தில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,452 மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.