மத்திய கிழக்கிற்கு 1000 மேலதிக படையினரை அனுப்ப அமெரிக்கா தயாராகியுள்ளதாக அமெரிக்க பதில் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான பதற்றத்தின் மத்தியில் 1000 மேலதிக படையினரை மத்திய கிழக்கிற்கு அனுப்ப அமெரிக்கா தயாராகியுள்ளதாக அமெரிக்க பதில் பாதுகாப்பு செயலாளர் பெற்றிக் சனாஹன் அறிவித்துள்ளார்.
ஈரானிய படையினரின் நடவடிக்கைகைள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க பதில் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஓமான் குடாவில் வைத்து 02 கப்பல்கள் தாக்கப்பட்ட விடயத்தில் ஈரானிய படையினர் தொடர்புபட்டுள்ளதாக அமெரிக்கா தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றது.
இது தொடர்பான புதிய படங்களையும் அமெரிக்கா ஆதாரமாக வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா ஈரானுடனான மோதலை விரும்பவில்லை என்றும், பிராந்திய பாதுகாப்புக்காக படையினர் அங்கு அனுப்பப்படுவதாகவும் அமெரிக்க பதில் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். (நி)