மட்டக்களப்பு சத்துருகொண்டான் கொக்குவில் இரண்டாம் குறுக்கு வீதியினை புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கம்பரலிய வேலைத்திட்டத்தின் 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு சத்துருகொண்டான் கொக்குவில் இரண்டாம் குறுக்கு வீதியினை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாநகர சபை உறுப்பினர் கே .ரகுநாதனின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரனினால், கம்பலிய வேலைத்திட்டத்தின் கீழ் 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த வீதியினை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கம்பரலிய வேலைத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாநகர சபை ஊடாக புனரமைக்கப்படும் வீதியினை, மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் இன்று நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.(சி)