முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
மாங்குளத்தில் இருந்து முள்ளியவளை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளொன்று ஒலுமடு பகுதியில் உள்ள வளைவில் திரும்ப முற்பட்ட வேளை வீதியோரத்தில் இருந்த மின்கம்பத்துடன் மோதுண்டதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் 17ஆம் கட்டை நெடுங்கேணியைச் சேர்ந்த 27 வயதுடைய காத்தலிங்கம் துஸ்யன் என்ற இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்ததுடன், இளைஞனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த முள்ளியவளைப் பகுதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை பாஸ்கரன் என்பவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(சி)