மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட பிள்ளையாரடியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தொன்றில், இரு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
மட்டக்களப்பிலிருந்து சென்றுகொண்டிருந்த பிக்கப் ரக வாகனம், வானுடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளது.
பிக்கப் வாகனத்தின் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமலேயே, இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த விபத்து காரணமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாத போதிலும், வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(நி)