இலங்கையின் 23 ஆவது இராணுவ தளபதியாக, மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று முற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவடம் இருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
இராணுவத்தளபதியாக பணியாற்றிய மகேஸ் சேனநாயக்க ஒய்வு பெற்றதை அடுத்து, புதிய இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் போது ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
இதேவேளை, கெடெட் அதிகாரியாக, 1984 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட ஷவேந்திர சில்வா, இராணுவத்தளபதி பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர், இராணுவ பணிக்குழாம் பிரதானியாக கடமை புரிந்தார்.(007)