போலந்தில் வெள்ளம் சூழ்ந்த குறுகிய குகையொன்றில் சிக்கிக் கொண்ட இருவரை வெளியில் கொண்டு வருவதற்கான மீட்பு நடவடிக்கையில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளத்தால் குகையின் நுழைவாயில் தண்ணீரால் நிரம்பியுள்ளதால், அவர்களால் வெளியே வரமுடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தத்ரா மலைப்பகுதியில் உள்ள மிக நீளமான மற்றும் ஆழமான குகையான வீல்கா ஸ்னீசா குகையிலேயே இருவரும் சிக்கியுள்ளனர்.
அவர்கள் அந்த குகையின் எந்தப் பகுதியில் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய முடியவில்லை என்பதால் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, குகைக்குள் செல்ல ஒரு வழியை ஏற்படுத்த, வெடிபொருட்களை பயன்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.