இலங்கையின் முதலாவது இலகுவகை ரயில் சேவையினை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், கொழும்புக்கும் மாலபேக்கும் இடையேயான 16 கிலோமீற்றர் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு,கொழும்பு மற்றும் மாலபேக்கும் இடையிலான 16 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட ரயில் சேவைக்காக 16 நிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பணியில் நிபுணத்துவம் வாய்ந்த ஐந்து நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.(நி)