தேசிய தௌபீக் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கைதுசெய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமையகத்தில் ஆயுத பயிற்சி பெற்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த நபர்கள், இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி கருப்பைய்யா ஜீவராணி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 30ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.(நி)