மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் கே.எம்.யு.எச்.அக்பர் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கௌரவிப்பு நிகழ்வு, மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாசலின் ஏற்பாட்டில், பள்ளிவாயல் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாயலின் தலைவர் எம்.எச்.எம்.சியாம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரிச்சங்கத்தின் தலைவர் எம்.ரி.ரஞ்சன், மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர்களான பாலித அபேகுரத்ன, ஏ.மோகன், எம்.சி.கலீல் ஹாஜியார், சட்டத்தரணிகள் உட்பட பள்ளிவாசல்கள் நிருவாகிகள், மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஓய்வு பெற்றுச் செல்லும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் கே.எம்.யு.எச்.அக்பரின் சேவையை பாராட்டி, பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கே.எம்.யு.எச்.அக்பர் 1985 தொடக்கம் 2019 வரையான 34 வருடங்கள் ஸ்ரீலங்கா சிறைச்சாலையில் சேவையாற்றியிருந்ததுடன், அவர் இறுதியாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிரதம அத்தியட்சகராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச்செல்கின்றமை குறிப்பிடத்தகக்கது.(மு)