பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் அழைப்பின் பேரில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று விசேட வழிபாட்டில் ஈடுபட்டார்.
தொடர்ந்து நல்லூர் ஆலயத்தின் உற்சவ காலப் பணிமனையையும் பிரதமர் பார்வையிட்டார்.
இதன்போது, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிரதமரின் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி, யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் என்.வேதநாயகன், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், யாழ் மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன், வடக்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் உட்பட யாழ்ப்பாண பிரதேச செயலர் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் உடனிருந்தனர்.(நி)