நுவரெலியா மாவட்டத்திலுள்ள, ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் தியசிறிகம பகுதியில், ஜம்பது அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாமிமலை பகுதியில் இருந்து டிக்கோயா பகுதியை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மீண்டும் சாமிமலை பகுதியை நோக்கி பயணித்து கொண்டிருந்தவேளை விபத்துக்கள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(நி)