ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்காவுக்கு அடுத்த மாதம் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அங்கு உலக நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.
செப்டெம்பர் 17 முதல் 27 வரை, நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள செல்லும் ஜனாதிபதி, தன்னுடன் முக்கிய அமைச்சர்கள் சிலரையும் அழைத்துச் செல்லவுள்ளார்.
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவது உட்பட்ட முக்கியமான விடயங்கள் குறித்தான தனது நிலைப்பாட்டை, ஜனாதிபதி ஐ.நா பொதுச் சபையில் வெளிப்படுத்துவாரென, தகவல்கள் வெளியாகியுள்ளன. (007)