ஜனாதிபதியின் புதல்வியின் வாகனம் மோதி விபத்திற்குள்ளானதில், ஒருவர் காயமடைந்துள்ளதுடன், வாகனத்தின் சாரதியான கமாண்டோ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் புதல்வி சத்துரிக்கா சிறிசேனவின் வாகனத் தொடரணியின், டிபெண்டர் பாதுகாப்பு வாகனம், நேற்று புத்தலவில் விபத்துக்குள்ளாகியதில், ஓட்டோ சாரதி ஒருவர் காயமடைந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் டிபெண்டரின் சாரதியான கமாண்டோ ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற போது, ஜனாதிபதியின் புதல்வி வாகனத்தில் பயணம் செய்யவில்லை என, பொலிஸார் தெரிவித்துள்ளனர். (007)